தமிழ்நாடு முழுவதிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனை பரிசீலனையில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு, ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தது ஆகவே பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் […]
students
திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, 1330 திருக்குறட்பாக்களையும் […]
தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை உடன் முடிவுற்ற நிலையில், மொத்தம் உள்ள 1,07,395 இடங்களுக்கு, 2,99,558 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன அவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை முடிவுற்றது. இந்த நிலையில், 1,15,752 மாணவர்கள், […]
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.85% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் 326 அரசு […]
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் […]
நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை செல்போனில் தவறாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பாத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அங்குள்ள மாணவிகளை தனது செல்போனில் தவறாக புகைப்படம் மற்றும் […]
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், அவரை கேலி செய்த சக மாணவருக்கும் இடையே வாய் தகராறு உண்டாகியுள்ளது. அதன் […]
கோவை அருகே அதிகாலையில் டீ குடிக்க சென்ற இரண்டு மாணவர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் ஜோசப் மற்றும் சல்மான். நண்பர்களான இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்தவர்கள். கல்லூரி விடுதியில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கயிருந்து படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து இருப்பதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன்க்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சென்னை கிண்டியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த […]
தென்காசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல்களிலும் இரட்டை அர்த்த வசனங்களிலும் பேசி வந்ததாக தெரிகிறது. இதே போன்ற வேலையை இவர் 30க்கும் மேற்பட்ட […]