மகாராஷ்டிராவின் விதார்ப்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் மும்பையின் சார்ணி சாலையில் இருக்கின்ற அரசு விடுதியின் நான்காவது தளத்தில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய அறையில் இருக்கின்ற மற்ற பெண்கள் ஊருக்கு சென்று விட்ட நிலையில் கடந்த 6ம் தேதி தனியாக அறையில் இருந்துள்ளார் இத்தகைய நிலையில், அடுத்த நாள் காலை அந்த பெண் தன்னுடைய அறையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இளம் […]

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்ன ராஜா குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா( 16) என்ற மாணவியின் தந்தையான கூலித் தொழிலாளி மது ஒதைக்கு அடிமையாகி அப்போது குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை இடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆகவே தந்தையின் இது போன்ற அடாவடியான செயல்களை கண்டு வந்த அந்த சிறுமி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையை […]

சென்னை மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் இவருடைய மகன் ராமச்சந்திரன்(36) வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அவருடைய குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இத்தகைய நிலையில், காணாமல் போன ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் அடையாறு […]

பெரம்பலூர் மாவட்டம் மணப்பத்தூர் கிராமத்தில் நடராஜன் பரிமளம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சினேகா (21) இவருக்கும், விக்கி என்ற நபருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதான மகிழ்மதி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், மாமியார் குடும்பத்தினருக்கும் சினேகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் […]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார். இந்த சூழ்நிலையில்தான் முருகேசனின் வங்கி கணக்குக்கு தவறாக பணத்தை அனுப்பியவர் பணத்தை மீட்டு தருமாறு […]

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49) இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (45) இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் ஒரு மகன் என்று 3 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய உடலை பரிசோதனை செய்தார். அப்போது ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்வதில் அவருக்கு ரத்தத்தின் […]

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் காண்பூரைச் சேர்ந்த அனுஜ் என்ற மாணவர் படித்து வருகிறார். மேலும் இவர் தனுடன் படிக்கும் மாணவியான நேகா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதத்தில், திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து காதலி நேகாவை சரமாரியாக சுட்டு இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் […]

வேலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள துத்திப்பட்டு பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் விமல்ராஜ் (48) டைலரான இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஸ்ரீ நித்தியா (18) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஸ்ரீநித்தியா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது […]

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை தெரிந்து கொண்ட செம்பரம்பாக்கத்தைச் சார்ந்த அவருடைய காதலியும் துக்கம் தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் மரணமும் அந்த […]

சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் ஓம்சக்தி நகரை சேர்ந்த கோபி மற்றும் சிந்துஜா உள்ளிட்ட இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் வருடம் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கோபி ஆடிட்டராக பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்னர் அவர் பலரிடம் கடன் வாங்கி அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், ஏல சீட்டு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு அதில் பெரும் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. […]