காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாடிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை […]

