சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார். இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை […]

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்பிற்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்கள் சமூக நிலை குறித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை ஆகும். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, […]

நிலம் மற்றும் மனை விவகாரங்களில் துல்லியமான தகவல் மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுகளை ஆன்லைன் மயமாக்கி, இடைத்தரகர் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கீகாரமற்ற மனைகள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளமான www.tnlayoutreg.in தற்காலிகமாக செயலிழந்தது. இந்த தளத்தின் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக, […]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் […]