அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021இல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து மத்திய அரசு முழு விலக்கு அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த சலுகையைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மத்திய அல்லது மாநில சுகாதார […]

2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் […]

தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு பெற முடியும். இதுவரையில்.3 லட்சம் ரூபாய் […]

ஒவ்வொரு நிதியாண்டு முடிவடையும் போதும், வருமானம் மற்றும் பிற லாபங்களின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வருமான வரி செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதன் மூலமாக வரி செலுத்தும் முதலீட்டாளர் […]

வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “மதுரை மண்டலத்தில் வருமானவரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் 2ஆயிரத்தி 100கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது, அடுத்துவரும் நிதியாண்டுகளில் கூடுதலாக வரிவசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் […]

2022-2023ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக வீட்டு வரி […]

2022-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,45,867 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி […]

சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி […]

எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் […]

வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]