நாட்டில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்குதான் நாட்டிலேயே அதிக அளவிலான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட எல்லோரின் உடமைகளும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் […]