2024 சியுஇடி, பிஜி தேர்வுகளுக்கு, திருவாரூர் புதிய தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என என்.டி.ஏ அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தனது செய்தி குறிப்பில்; 2024 சியுஇடி பிஜி தேர்வுகளுக்கு, திருவாரூர் புதிய தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என என்.டி.ஏ அறிவித்துள்ளது. சியுஇடி பிஜி 2024 தேர்வுகளுக்கான தேர்வு மையமாக திருவாரூரை என்.டி.ஏ சேர்த்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே வேறு மையங்களைத் […]

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ 15 லட்சம் மானியம் வழங்கப்படும். இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க இருக்கிறார். […]

திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு பார்வை முற்றிலுமாக பறி போனதால், மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாகக் கூறி, இழப்பீடு வழங்கக்கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விஜயகுமாரிக்கு ஐந்து லட்சம் ரூபாயை இழப்பீடாக மூன்று மாதங்களில் வழங்க கடந்த 2015ம் ஆண்டு உத்தரவிட்டது. […]

மாணவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்பம் என்றவுடன் போலீசுக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு(32). நெல்வியாபாரம் பார்த்து வரும் இவர் 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி, ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இது மாணவியின் வீட்டுக்கு தெரிந்ததால் கண்டித்தார். ஆனால், அதையும் மீறி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இதை வீட்டுக்கு சொன்னால் […]

திருவாரூர் அருகே குவைத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபரை அங்கு சுட்டுக் கொன்றுவிட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை தமிழகம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடன் வாங்கியுள்ளதால் பெரும் சிரமமாக இருந்துள்ளது. வெளிநாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் […]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு கணக்கு ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், மாவட்ட கல்வி […]