தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது. இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சியினை எடுத்துக் கொள்வது சிறந்த பலன் கிடைக்கும். இஞ்சியில் நார்ச்சத்துக்கள், […]
tips
தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம். நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் சற்று குணமாகும். எலுமிச்சை விதை, எலுமிச்சை தோல் மற்றும் எலுமிச்சை இலை எடுத்து […]
என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் அதிலிருந்து விடுபடலாம். இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் […]
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்கள் நிறைந்தவை. பழத்தில் சுவையை மட்டுமே ருசிப்பதற்கு மட்டுமே எடுத்து கொள்கிறோம். ஆனால் அதிலிருக்கும் தோல்களை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆரஞ்சு பழங்களில் சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத் தோல்களிலும் வைட்டமின் சி-யின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தாவர கலவை மற்றும் பாலிபினால்கள் ஆரஞ்சு தோலில் இருப்பதால் இது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் […]
நாம் சாதாரணமாக நினைக்கும் சோளத்தில் வைட்டமின் பி கொண்ட சத்துகள் மிகவும் நிறைந்துள்ளது. இதன் வேலையே நரம்பு மண்டலங்களை சரியாக சீர்படுத்தி அதன்மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருந்தால், பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையில் பிறக்கின்ற வாய்ப்புக்களாக அமைகின்றன. இவ்வாறு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக சோளம் இருக்கிறது. மேலும் இதனில் 100 கிராம் சோளத்தில் 365 எடையுள்ள கலோரி […]
உணவும் தண்ணீரும் இல்லையென்றால் மனிதனால் மட்டும் அல்ல எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது. உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுபோன்று நேரம் கழித்து உணவு எடுத்து கொள்வதும் நமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவில் உணவை தாமதமாக எடுத்துக் கொண்டால், நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இரவில் உணவை உட்கொள்ள சரியான நேரம் 7 மணி முதல் 8.00 […]
கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது கறிவேப்பிலை என்று கூறலாம். கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. கருவேப்பிலையில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் என்பது நிறைந்திருக்கிறது. மேலும் அதிக அளவில் இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது. தினந்தோறும் 10 கறிவேப்பிலை இலையினை தொடர்ந்து எடுத்து கொண்டால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். அதிகமாக அனைவரும் கவலை படும் முடியின் வளர்ச்சிக்கும் இது பெரிதளவில் உதவுகிறது. தினமும் இதனை […]
நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு நோய்களுக்கு நாம் அடிமையாகி கொண்டு இருக்கிறோம். இதனில் இருந்து விடுபெற சிறந்த வழிகளை இங்கே காணலாம். நாள்தோறும் 4 பாதாம் பருப்புகளை உண்டு வருவதால் உடலில் இருக்கும் தேவையற்ற பல கொலஸ்ட்ரால் கரைய செய்கிறது. அத்துடன் அரை டீஸ்பூன் அளவு கசகசா சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. கசகசா சேர்ப்பதனால உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை சேர்த்துக் […]
நமது வீட்டின் அருகே எங்கு பார்த்தாலும் அங்கும் இங்கும் கொடியில் படர்ந்து கிடக்கும் கோவைக்காயானது பழங்காலத்திலிருந்தே சர்க்கரை நோய்க்காக மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்க்கரை வியாதிக்கு தொடர்ச்சியிலே கோவைக்காய் உண்பது நல்ல பலனை தரக்கூடியது. கோவைக்காயின் சாறினை குடிப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே இதனை அச்சமின்றி உண்டு வரலாம். கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை மிதமாக கட்டுப்படுத்தி வைத்து கொள்கிறது. […]
தேங்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, புரதச் சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என்று உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் இந்த தேங்காயில் காணப்படுகிறது. தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள், நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிறு குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் சுத்தமான தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. அத்துடன் சிறுநீரக கற்கள் இருக்கின்ற நோயாளிகளும் […]