தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் […]
TN Government schools
சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக […]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3,808 நூலகங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,525 நூலகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார். முதல் கட்டமாக 2021 மற்றும் 22-ஆம் ஆண்டில் 4, 116 நூலகங்களை புதுப்பிக்க […]
தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது .எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு […]
இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் சென்றனர். பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அண்டை மாநிலமான […]
2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 […]
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்பிரிவு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் வழங்க இருப்பதாக […]
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மலம் நியமனம் வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கீழே இடம் பெற்றுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் […]
தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு […]