இந்த ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. 2023-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பொது […]
tn government
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;:2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு […]
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் […]
ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவசதியாக , சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 […]
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார். இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு […]
தென்னை ஏறும் தொழிலாளர்கள் விபத்து காப்பீட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. மேலும் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]
TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, RRB, IBPS, TNUSRB, SSC, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் […]
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என டாஸ்மார்க் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு டாஸ்மாக் கழகம் மாநிலத்தில் உள்ள தனியார் மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யும் மதுபானத்தின் அளவையும், ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய கொள்முதல் செய்யப்படும் விலையையும் வெளியிட வேண்டுமா இல்லையா என்பதை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் தனியார் மதுபான ஆலைகள் மற்றும் […]
சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்ட வந்தது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2500 ரூபாய் பணம், அதோடு பொங்கல் வைக்க தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டனர். ஆனால் இவை அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரையில் வழங்கப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, சி மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு […]