2022-2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத் தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், விளம்பர வரி, உரிமக்கட்டணம் போன்றவற்றை இணைய வழியின் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இணையதளத்தின் மூலமாக வீட்டு வரி […]
tn government
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 16-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. […]
கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020-21 அரவைப்பருவத்தில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, […]
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை […]
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் […]
சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன. 28,000 […]
சேலம் மாவட்ட முன்னாள் படைவீர்கள் சார்ந்தோர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் அறிவது. தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர், கைம்பெண்கள் மற்றும் சிறார்கள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000/- ஊக்கத் தொகையாக 23.09.2022 முதல் இத்தொகை வழங்கிட முடிவு […]
டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி […]