வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு […]

நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் […]

சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கர்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கர்வகளும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர்க் கல்வி […]

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாணவர்கள் ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் […]

ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் […]

காவல்துறையில் 25 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பெற்றதாக பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில் பதவி உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தலைமைக் காவலர் பதவியில் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து, மொத்தம் 25 ஆண்டுகள் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் தலைமைக் காவலர்களை பதவி உயர்வு வழங்கப்படும். நகரங்களில் உள்ள ரேஞ்ச் துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு அதிகாரங்களை வழங்கி, வழிகாட்டுதல்களை […]

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு. வெளிநாடு பயணிக்கும் நபர்கள் வைத்திருக்க வேண்டிய அடிப்படையான ஆவணம் பாஸ்போர்ட். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளம், பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து […]

தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]

திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏ.டி.ஜி.பி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து […]