கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ […]

டிஎன்பிஎஸ்சி உதவி செயலர் பிரிவில் 59 காலியிடங்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் அதற்கான காலகடு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது. தற்சமயம் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அந்த ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் […]

ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) […]

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதன்மைத் தேர்வுக்கான தேர்வுகட்டணம் ரூ.200-ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய […]

தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ உள்ள காலி பணியிடங்களை நிரப்பும்‌ பணியை, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மேற்கொண்டு வருகிறது. துணை ஆட்சியர்‌, காவல்‌ துணைகண்காணிப்பாளர்‌ உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்‌ 1முதல்நிலைத்‌ தேர்வு, கடந்த 2022ஆம்‌ஆண்டு நவம்பர்‌ 19-ம்‌ தேதி நடைபெற்றது. இதனை 3 லட்சத்திற்கும்‌ அதிகமானோர்‌ எழுதினர்‌. இந்தநிலையில்‌, நேற்று குரூப்‌ 1முதல் நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ வெளியாகி உள்ளன. இதனை தேர்வர்கள்‌ www.tnpsc.gov.in என்ற […]

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கம்ப்யூட்டர் மூலம் 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது. […]

குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”குரூப் 2 பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு 25-ம் தேதி காலை மற்றும் மாலை நேரங்களில் 20 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும் விடைத்தாள்களில் உள்ள […]

நோக்கம்’ என்ற செயலியின் மூலம் TNPSC,TNUSRB, SSC,IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவணங்களிலும்‌ பணிபுரிபவர்களுக்குப்‌ பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின்‌ தன்மையை விரிவுபடுத்தவும்‌, தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் அது சென்றடைய வேண்டும்‌ என்ற எண்ணத்தில் AIM TN என்றழைக்கப்படும்‌ […]

குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப் – 2 ஏ நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதத் தகுதியான தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவு எண் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் வாயிலாக ( https://rb.gy/k4xd6w […]