வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு […]
TNSTC
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420ல் முதல் |அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகையை 2024 செப்டம்பர் 1 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று 12 மணி […]
தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்சமயம் பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பயணத்திற்கான பயணச்சீட்டை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யும்போது திரும்பி வருவதற்கான பயண சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும். […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Fitter Apprentice & Mechanic Motor Vehicle பணிகளுக்கு என மொத்தம் பத்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதியுடன் செயல்படக்கூடிய பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.7,000 முதல் ரூ. 8,050 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் […]
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதியை தற்போது தமிழக அரசு செய்திருக்கிறது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களை கடந்து தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகிறது அவற்றை முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இத்தகைய நிலையில், முன்பதிவு சேவையை தற்போது தமிழக அரசு விரிவுப்படுத்தி இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இருக்கைகளை இணையதளம் மூலமாக […]
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் […]
தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுனர்களுக்கு ரூபாய் 1000/- நிவாரணம் வழங்கப்படும் என்று இணையத்தில் பரவிய செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000/- வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு […]
அரசு போக்குவரத்து கழகத்திற்கு, 807 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 800 நடத்துனர் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் பணியிடங்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், 203 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிரப்புவது தொடர்பாக, போக்குவரத்து துறை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. […]
அரசு பேருந்துகளின் இருப்பிடத்தினை ‘Chennai Bus App’ மூலம் அறிந்து கொள்ளும் சேவையை போக்குவரத்துத் துறை விரிவுபடுத்தியுள்ளது. இது குறித்து, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை ‘சென்னை பஸ் செயலி’ மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்து செயலி […]