தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது என்ற முழுமையான செயல்முறை விவரம் பலருக்கு தெரிந்திருக்காது. உங்கள் இ-சலான் வைத்து ஆன்லைனிலும் […]

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தடுப்புகளில் ஒட்டியுள்ளனர். சென்னையில் நள்ளிரவில் வாகன விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக சென்னையில் அதிக அளவில் விபத்துடன் நடைபெறக்கூடிய இடங்களில் விபத்துக்களை தடுப்பதற்காக ஒளிரும் சிவப்பு மின்விளக்குகளை பொருத்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் […]

பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தானியங்கி முறையை பெங்களூரு போக்குவரத்து போலீசார் செயல்படுத்தியுள்ளனர். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறல்களை தானாகக் கண்டறிந்து சலான்களை வழங்குவதற்காக நகரைச் சுற்றி ஒரு நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவியுள்ளனர். பெங்களூரு போக்குவரத்து காவல்துறை காவல்துறையின் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைத் தொடர்பில்லாத தானியங்கி அமலாக்கத்தை நோக்கிச் செயல்படும் நுண்ணறிவு […]

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் சென்ற மாதம் 26-ம் தேதியிலிருந்து புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அபராத தொகையானது பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நாகராஜன் என்ற போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டி ஒருவரிடம் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அபராதம் விதிக்கும் அதிகாரம் சிலருக்கு […]

நூற்றாண்டுகள் ஆயிரம் தாண்டினாலும் விபத்துகளுக்கும் அதன் பலிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனை விட மிகப்பெரிய வருத்தம் என்பது அவசரத்தில் வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருப்பது தான். இதை தடுக்க தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பபடும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் , தீயணைப்பு வாகனங்களுக்கும் வழிவிடத் […]

போக்குவரத்து போலீஸார் உங்களைப் பிடிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.. போக்குவரத்து காவலர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க ஒரு சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. போக்குவரத்து போலீஸ் சீருடையை அணிந்திருக்க வேண்டும், அதில் அவருடைய பெயர் இருக்க வேண்டும். காவலர்கள் சிவில் உடையில் அணிந்திருந்தால், அடையாளச் சான்றைக் காட்டச் […]