தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆணையராக ஜான் லுாயிஸ், சென்னை மாநகராட்சி (கல்வி) இணை ஆணையராக கற்பகம் நியமனம். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில்: ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் […]

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அரசு சிறப்பு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையில் பணியாற்றிய சதிஷ் சந்திரா சவான், அரசு செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு […]

அதிவட்டி விகிதத்தில் (floating interest rate) வழங்கப்படும் கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பும் தனிநபர் கடனாளர்களிடமிருந்து, வங்கிகள் முன்கட்டணத் தொகை அல்லது pre-closure charges எதையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிவட்டி விகித கடன்களில், முன்பணம் செலுத்தும் கடனாளர்களிடமிருந்து எந்தவிதமான அபராத கட்டணமும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் […]

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]

தொடக்க, நடுநிலைப் பள்ளி அனைத்து வகையான ஆசிரியர்கள் 2025-2026. பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் EMISல் பதிவேற்றம் செய்வது சம்பந்தமான தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-6 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதே போல […]

தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் […]