புதுமைபெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை பெற உயர்கல்வி பயிலும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் கல்விக்கு உதவும் வகையில் பட்ட […]
transgender
திருமணம் செய்து கொண்ட திருநங்கைக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா […]
திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ்வழியில்) 6-12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையை […]
சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]
தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 24 ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு திருநங்கை நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நல வாரியத்தின் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை கல்வி […]
கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் […]
காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வு கதையை எடுத்த ராகவா லாரன்ஸ், ரொம்ப வித்தியாசமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா கேரக்டரின் நடித்த சரத்குமாரின் வளர்ப்பு மகளாக அந்த படத்தில் நடித்தவர் தான் திருநங்கை திவ்யா. இவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திவ்யா தன்னுடைய பேட்டியில் […]
சென்னை மாதவரம் பகுதியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாதவரத்தை அடுத்த 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டி இருக்கும் லேத் பட்டறை அருகில் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அந்தப் பகுதியில் லாரியை நிறுத்தி இருந்த மணலியைச் சார்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை எடுப்பதற்காக சென்று இருக்கிறார். அப்போது அவரது லாரி அருகே […]
கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் நல்ல நட்பாக மாறியிருக்கிறது. பின்னர் அந்தப் பழக்கமே நெருக்கமாக […]
தெலுங்கானா மாநில பகுதியில் பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகள் இருவரும் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் […]