தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி […]

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் வினோத் ஜோஸ்வா என்ற நபர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இத்தகைய நிலையில் அந்த தேவாலயத்திற்கு பாட்டு வகுப்புக்காக வந்த பெண்ணை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 14 வயது முதலே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்சமயம் அந்தப் பெண் திருமணமாகி கர்பமாக இருக்கின்ற நிலையில் வினோத் ஜோஸ்வா அந்த […]

தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (30) திமுகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கினார் அந்த புகாரில் என்னுடைய முகநூல் பக்கத்தை பார்த்த போது செல்வபாலா என்பவரின் பதிவு அதில் இருந்தது. அந்தப் பதிவில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று […]

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கின்ற கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32) இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி புனித ஆனி எப்சிபா(29) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு 2️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வெளியில் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை வழிமறித்த […]

தூத்துக்குடியின் 3வது மைல் ஷங்கர் காலணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் மதுரை புறவழிச் சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் 2வது மகனான உதயசங்கர் (26) டீக்கடையில் இருந்திருக்கிறார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வாடை வாங்கி உள்ளனர். மேலும் வடைக்கு சட்னி தருமாறு கேட்டதாக தெரிகிறது. ஆனால் உதவி சங்கர் சட்டினி இல்லை என்று தெரிவித்ததால் மூவரும் சேர்ந்து உதய […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதி உதவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டம் சிவலார்பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) ஆகியோர் மற்றும் சுதன் த/பெ.கார்திக்கேயன் உள்ளிட்டோர் நேற்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்க சென்றனர். அப்போது […]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (33). இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று அதிகாலை தன்னுடைய ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆட்டோ வானரமுட்டி கட்டாரங்குளம் இடையே காளம்பட்டி அருகில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த […]

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை செக்காரக்குடி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மாணவி அந்த இளைஞரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், அந்த மாணவி மீது இளைஞர் சோலையப்பன் கடும் கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இத்தகைய நிலையில், தான் நேற்று […]

தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்ல தம்பி. இவர் இரு லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில் அவருக்கு தொழிலில் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே கடனை அடைப்பதற்காக தன்னுடைய பூர்வீக வீட்டை விற்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அவருடைய தம்பி முத்துராஜ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். ஆகவே இன்று அண்ணன் நல்ல தம்பி […]

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டாலும் இது போன்ற நடைமுறைகள் குறைந்தபாடில்லை. கடந்த 2019 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் என்பவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டார்கள் இதனை அடுத்து […]