தூத்துக்குடி அருகே கடந்த 28ஆம் தேதி, அதாவது, நேற்றைய தினம் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இரண்டு கார்களில், கடத்தி வரப்பட்ட சுமார் 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதனை கடத்தி வந்த 13 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆரோன், இசக்கி, கணேஷ், […]

தூத்துக்குடி அருகே, ஒரு காதல் ஜோடி இரவு 10 மணி அளவில் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, காதலனை அடித்து, விரட்டி, விட்டு இரண்டு மர்ம நபர்கள், அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த, ஒரு இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. அதன் பிறகு, […]

தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (28) கோவையில் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் […]

தூத்துக்குடி அருகே புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அலட்சியம் காரணமாக, 68 வயது மூதாட்டியை கதற, கதற கற்பழித்து, கொலை செய்த மர்ம கும்பலால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (68). இவருடைய கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில், அந்தோணியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு […]

பொதுவாக உள்ளூர் விடுமுறை என்பது, பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அல்லது ஏதாவது, முக்கிய விழா போன்றவை நடைபெறும் போது விடப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா ஆலயத்தின் திருத்தேர் விழா இன்று நடைபெற இருக்கிறது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்வார்கள். ஆகவே […]

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கின்ற கிருஷ்ணா நகரில் கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கால் சென்டரில் பணியாற்றும் பெண்கள் பணி முடிவடைந்ததும் சுமார் 7️ பெண்கள் ஒரு காரில் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அந்த கார் குமாரபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே திருநெல்வேலி சாலையில் அரசு மதுபான கடை அருகே சிமெண்ட் விற்பனை செய்யும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த லோடு வேனை ஒரு […]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி […]

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் வினோத் ஜோஸ்வா என்ற நபர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இத்தகைய நிலையில் அந்த தேவாலயத்திற்கு பாட்டு வகுப்புக்காக வந்த பெண்ணை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 14 வயது முதலே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்சமயம் அந்தப் பெண் திருமணமாகி கர்பமாக இருக்கின்ற நிலையில் வினோத் ஜோஸ்வா அந்த […]

தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (30) திமுகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கினார் அந்த புகாரில் என்னுடைய முகநூல் பக்கத்தை பார்த்த போது செல்வபாலா என்பவரின் பதிவு அதில் இருந்தது. அந்தப் பதிவில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று […]

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கின்ற கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32) இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி புனித ஆனி எப்சிபா(29) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு 2️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வெளியில் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை வழிமறித்த […]