இளம் வயதில் தொடங்கிய ஒரு தாய்மையின் கனவு, பல தசாப்தங்களுக்குப் பிறகு நனவாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எர்ரமட்டி மங்கம்மா, 74 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து, குழந்தைச் செல்வத்துக்காக நீண்ட காலம் காத்திருந்த தம்பதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் சம்பவமாக மாறியுள்ளார். மங்கம்மாவுக்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 57 ஆண்டுகள் ஆன நிலையிலும், அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. வயது காரணமாக இயற்கையான முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாத […]

