கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவன் மேடைக்கு வந்தபோது அவரை நெருங்குவதற்காக தொண்டர்கள் ஒரே நேரத்தில் முன்வந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவரது உரையும் முழுமையாக நடைபெறவில்லை. மாநாட்டுக்காக காலை முதலே தொண்டர்கள் உளுந்தூர்பேட்டையில் திரண்டனர். மாலை திருமாவளவன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தபோது, அவரை வரவேற்கவும் சந்திக்கவும் […]