விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கல் தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென் அஹோபிலம் என்று அழைக்கப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்றது செஞ்சி ஆட்டுச் சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, பெங்களுர் போன்ற மாநிலங்களில் இருந்தும் இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வர். இந்நிலையில், வரும் 29-06-23 தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனையாகி வருகிறது. இன்று செஞ்சி வாரச் சந்தையில் ஆடுகள் […]

விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமங்களில் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளனர் 2 மாவட்டங்களிலும் எல்லை பகுதிகளில் அமைந்திருக்கின்ற திருக்கனூர் நெட்டப்பாக்கம், சந்தை புதுகுப்பம், செட்டிபட்டு, திருபுவனம் போன்ற இடங்களில் அடிக்கடி வீடு புகுந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் அமாவாசை தினம் நெருங்கி விட்டாலே அச்சத்தில் உறைய தொடங்கினர். 10க்கும் […]

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகன் ஜெயஸ்ரீ 15 அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020ஆம் வருடம் மே மாதம் ஒன்பதாம் தேதி ஜெயஸ்ரீ வீட்டில் தனியே இருந்த போது திடீரென்று வீட்டிற்குள் இருந்து புகை வந்தது அந்தப் பகுதியை மக்கள் அங்கு சென்று பார்த்த போது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், […]

விழுப்புரத்தில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த பாயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் […]

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்துள்ள செங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 52 டைலர் வேலை பார்த்து வருகிறார் இவர் காலை 9 மணி அளவில் கொளுப்பூர் ஆற்றங்கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆன பின்னரும் இவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கே முருகன் மயங்கி நிலையில், இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் காவல் […]

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் ஆரோக்கிய சாமி மற்றும் அவருடைய மனைவி பெரியநாயகி உள்ளிட்டோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், தன்னுடைய கணவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது பெரிய நாயகிக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளத்தொடர்பு சம்பந்தமாக திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் பெரியநாயகி புகார் வழங்கிய போது கணவன், மனைவிக்குள் சமாதானமாக […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர் எஸ் மணி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி 31 மெக்கானிக்கான இவரும் எல் என் புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ரம்யாவின் கர்ப்பத்தை கலைத்துள்ளார் சுப்பிரமணி. அதோடு சென்ற 22ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள […]

விழுப்புரம் மாவட்டம் கடந்த 13ஆம் தேதி மாலை கள்ளச்சாராயம் குடித்து 70க்ஜ்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். எல்லோருக்கும் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டதன் காரணமாக, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட தலைமையின் மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்க பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மெத்தனால் […]

இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரங்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 24,683 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 90.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் […]