இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை இடுகையிட சரியான நேரத்தை அறிவது நல்ல உள்ளடக்கத்தை உருவாக்குவது போலவே முக்கியமானது. சரியான நேரத்தில் இடுகையிடுவது, சென்றடைதல், ஈடுபாடு மற்றும் வைரலாகும் வாய்ப்புகளை பெரிதும் அதிகரிக்கிறது. நீங்கள் எப்போதாவது ஒரு சிறந்த வீடியோவை உருவாக்க மணிக்கணக்கில் கடினமாக உழைத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய பிறகு, அது ஒரு சில லைக்குகளையும் பார்வைகளையும் மட்டுமே பெற்றிருப்பதைக் கண்டால், கவலைப்பட வேண்டாம். பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இது […]
viral
அமெரிக்காவில் Dusting சேலஞ்ச் என்ற வைரல் ட்ரெண்ட் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது பல ட்ரெண்ட்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டஸ்டிங் (Dusting) எனப்படும் வைரலாகி வருகிறது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த ஆன்லைன் ட்ரெண்டை செய்து பிரபலமாக நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத […]
விழுப்புரம் மாவட்டத்தில் ஆவின் பாலகத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் ஆவி நிர்வாகத்திடம் முறையீடு செய்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது . விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் நிலையம் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்து வருகிறார். இவர் பால் நிலையம் அருகே உள்ள ஆவின் […]
தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த அதிநவீன ரோபோவின் முகபாவனைகள் மனிதர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடான முகபாவனைகளை ஒத்திருக்கின்றன. சமீபத்தில் […]
மத்திய பிரதேச மாநிலத்தின்குவாலியர் நகரில் நாய்க்குட்டியை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளியை தேடி வருகிறது.இந்தச் சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள ஹரி ஷங்கர்புரம் என்ற இடத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த வரிசங்கர்புரம் ஜான்சி ரோடு […]
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ஃபைசியா பாத் நகரிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிர்வில் கட்டிட இடுப்பாடுகளில் […]
வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் தான் வட மாநிலம் ஒன்றில் நடந்திருக்கிறது. […]
கூடலூர் நகராட்சி மன்றத்தில் நகராட்சி மன்ற தலைவி வார்டு கவுன்சிலர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்தின் போது நகராட்சி மன்ற தலைவருக்கும் கவுன்சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நகராட்சி மன்ற தலைவி பரிமளா 7வது வார்டு கவுன்சிலர் சத்தியசீலன் என்பவரை தாக்க முயன்ற […]
திருமணத்திற்கான புதிய செயலி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த செயலி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. தொழில் முறையிலும் ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் என்பது நடுத்தர வர்க்க மக்களின் தவிர்க்க முடியாத ஒரு சுமையாக தற்காலங்களில் இருந்து […]
உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக டிக்கெட் பரிசோதவருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ரயில்களில் பயணம் செய்யும்போது அரசு அலுவலர்களுக்கு என்று இலவச சலுகைகள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்நி அவர்களும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் பயணம் ஒன்றின் போது […]