தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் ஆரம்பித்த நிலையில், புயல் சின்னம் காரணமாக, பரவலாக மழை பெய்து வந்தது. ஆகவே தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது. இத்தகைய நிலையில்தான் தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற […]

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாங்க கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் சின்னம் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடந்தது. இதனை தொடர்ந்து, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, வரும் 17ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான […]

தமிழ்நாட்டில் நடப்பாண்டு வழக்கத்தை விடவும் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. ஆகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது. இத்தகைய நிலையில், நாதமிழகத்தில் எதிர்வரும் 5 நாட்களுக்கு […]

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த அதிதீவிர புயலான மோக்கா மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, […]

வங்க கடலில் அதி தீவிர புயலாக வலு பெற்றுள்ள மோக்கா புயல் நாளை வங்கதேசம், வடக்கு மியான்மர் இடையே கரையை நோக்கி நகரும். இதனால், வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய […]

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்த புயல் மியான்மர் நோக்கி நகரும் என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்கிழக்கு […]

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்ட நிலையில், நேற்றைய தினம் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை மோக்கா என்ற புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே வரும் 14ஆம் தேதி இந்த புயல் கரையை […]

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது. அதே சமயம் கோடை மழையும் பெய்து வருவது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது. இத்தகைய நிலையில் தான் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் […]

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக மாறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆகவே தமிழகத்தில் இன்று ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் […]

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழே எடுத்து சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் இது வரும் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று […]