தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மழைக்காலம் முடிவடைந்து பனிக்காலம் தொடர்ந்தது. இந்த பனிக்காலம் தற்போது வரையில் நீடித்து வருகிறது. ஆனாலும் அப்போது தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெற்ப்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் மழை பெய்ததன் காரணமாக, விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். […]