’’மகளை பத்திரமாக கவனித்துக்கொள்’’ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பைலட்டின் உருக்கமான இறுதி வார்த்தைகள் !!!

கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பைலட் கடைசியாக பேசிய உருக்கமான தகவல்கள் பற்றிஅவரது மனைவி பகிர்ந்து கொண்டுள்ளார்..

நேற்று 6 பேருடன் உத்தராகண்ட் மலைப்பகுதியில் வழிபாடு நடத்திவிட்டு தனியார் ஹெலிகாப்டரில் 6 பக்தர்களுடன் புறப்பட்டது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அனில் சிங் என்பவர் ஹெலிகாப்டரை ஓட்டினார்.


மலைப்பகுதியில் உயர சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென மலையில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துஏற்பட்டது. இந்த விபத்தில் அனில் சிங் உள்பட பக்தர்கள் 6 பேர் என 7 பேருமே உடல் கருகி உயரிழந்தனர். வானிலை சரியில்லாததால் விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் விபத்து ஏற்படும் முன்பாக தனது மனைவி அனந்திகாவுடன் அனில் சிங் பேசியது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு பிரோசா சிங் என்ற மகளும் உள்ளனர். இது குறித்து அனில் சிங்கின் மனைவி ஷெரீன் கூறுகையில் ’’ என்னிடம் என் கணவர் கடைசியாக நேற்று என்னிடம் பேசினார். மகளுக்கு உடல் நிலை சரியில்லை . அவளை நன்றாக பார்த்துக் கொள் என என்னிடம் பேசினார். ’’ என தெரிவித்தார்.

Next Post

எச்சரிக்கை : ’இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க பரிசுகளை அள்ளுங்க ’’ இது மாதிரி வரும் எஸ்.எம்.எஸ். விளைவிக்கும்  ஆபத்துகள்!!

Wed Oct 19 , 2022
இந்திய கணினி அவசரநிலை பதில் அளிக்கும் குழு விழாக்காலங்களை பயன்படுத்தி வரும் குறுந்தகவல்கள் பற்றிய அதிர்ச்சி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து இணைய தள இகாமர்ஸ் நிறுவனங்களும் அதிக அளவில் சலுகைகளை அறிவிக்கின்றன. இதனிடையே அதே போல சலுகைகளையோ அல்லது இந்த  லிங்கை க்ளிக் செய்து பரிசுகளை அள்ளுங்கள் என்பது போன்ற குறுந்தகவல்களை நீங்கள் க்ளிக் செய்வதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க […]
cyber criminals stole rs 1 2 trillion from indians in 2019 survey e1679368867828

You May Like