சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவு.. நவம்பர் 19ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அரசாணை வெளியீடு..

Tn Govt 2025

ஊர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலை, நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்களை நீக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.


நீர் நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை சூட்டவும், தெருக்கள், சாலைகளுக்கு அறிஞர்கள், தலைவர்களின் பெயரை சூட்டவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More : கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

English Summary

The Tamil Nadu government has issued an order to remove caste names from the names of towns.

RUPA

Next Post

இளம்பெண்ணை ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று 7 பேர் பலாத்காரம்..!! வலியால் துடிதுடித்துப் போன பரிதாபம்..!!

Wed Oct 8 , 2025
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினரின் சதி காரணமாக 7 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமர் காவல் நிலையப் பொறுப்பாளர் பிரவீன் குமார் மோடி அளித்துள்ள தகவலின்படி, இந்தச் சம்பவம் செப்.30ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. தசரா திருவிழாவை காண மர்தான் மோரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர் அழைத்துள்ளார். அங்கு […]
Child Rape 2025

You May Like