மீன் குஞ்சுகள் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கும் தமிழக அரசு…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

tn Govt subcidy 2025

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் பணிகளை செய்து வருகின்றனர்.

மேற்படி மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டும் மற்றும் மீன் உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 எக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000/- மானியமாக வழங்கப்படவுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இத்திட்டம் குறித்தான இதர சந்தேகங்களுக்கும். விண்ணப்பங்கள் பெறவும் ஒட்டப்பட்டியில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் நேரில் சென்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: வெளிநாடு செல்லும் கனவுகளை நிஜமாக்கும் அதிசய சிவன் கோவில்..!! தமிழ்நாட்டில் எங்க இருக்கு தெரியுமா..?

Vignesh

Next Post

சூப்பர்...! பேக்கரி பொருட்கள் தயாரிக்க 3 நாட்கள் தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி...!

Mon Jun 2 , 2025
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 09.06.2025 முதல் 11.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், […]
Tn Govt 2025

You May Like