வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது. அதே சமயம் கோடை மழையும் பெய்து வருவது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது.
இத்தகைய நிலையில் தான் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், அதன் பிறகு நாளை மறுநாள் புயலாக மாறி வங்கதேசம், மியான்மரை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.