இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்டவை சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது ஆகவே தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி காணப்படுகிறது.
ஆகவே இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் ஓர் ஒரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் ஊர்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் ஊறி பகுதிகளிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு பங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கேரளா போன்ற மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம். மேலே தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.