தமிழக சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…!

தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலியில் இருந்து கேரளா இடுக்கிற்கு சுற்றுலா சென்று திரும்பிய டெம்போ ட்ராவெல்லர் வாகனம், அடிமாலி அருகே வந்த போது மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுலா வாகனத்தில் 20 பேர் இருந்ததாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விபத்து மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது என்றும், மேலும் விபத்து நடந்ததற்கான விவரங்களை நாங்கள் இன்னும் சேகரித்து வருகிறோம்” என்று அடிமாலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also Read: TVK | நடிகர் விஜய்யின் கட்சியில் இணைந்த பிரபல திரையரங்க உரிமையாளர்.!

Kathir

Next Post

Voter list: மக்களவைத் தேர்தல் 2024!… வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது?

Wed Mar 20 , 2024
Voter list: மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார், தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்துடன் முடிவடையும். ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் […]

You May Like