டாக்சி கட்டணம் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

புனேவில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு அடுத்த மாதம் முதல் டாக்சி கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புனேவில் இருந்து மும்பைக்கு தினமும் பலர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், அவர்களுக்கான டாக்சி கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து மும்பை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) வெளியிட்ட அறிவிப்பின் படி, மும்பையில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் மஞ்சள்-கருப்பு அல்லாத ஏசி டாக்சிகள் மற்றும் நீலம்-வெள்ளி ஏசி டாக்சிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஷீரடி, நாசிக், புனே ஆகிய நகரங்களுக்கு டாக்ஸி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மும்பை டாக்சி டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த திருத்தப்பட்ட கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மும்பை-நாசிக், மும்பை-ஷிர்டி மற்றும் மும்பை-புனே ஆகிய 3 வழித்தடங்களில் இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : TVK Vijay | ’திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’..!! நடிகர் விஜய் அறிக்கை..!! உண்மை என்ன..?

Chella

Next Post

BJP | பாஜக-வில் இணையும் ரஜினிகாந்த் பட நடிகை.!! தொண்டர்கள் முன்னிலையில் உணர்ச்சிபூர்வமான பேட்டி.!!

Wed Apr 3 , 2024
BJP: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முரட்டுக்காளை மற்றும் கழுகு ஆகிய திரைப்படங்களில் நடித்த சுமலதா பாஜகவில் இனிய இருப்பதாக அறிவித்திருக்கிறார். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . மத்தியிலாலும் பாரதிய ஜனதா கட்சி(BJP) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு 18-வது பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் […]

You May Like