சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய விமானம் விமான நிலையத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனெனில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்தை உடனே தரையிறக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது, விமான நிலையத்திலேயே மதுரை செல்லக்கூடிய விமானத்தில் பழுது கண்டறியப்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் இந்த விமானத்தில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். இவர்கள் வேறு விமானத்தில் பயணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 270-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் பழுது ஏற்பட்டு வருகிறது.
அதேபோல, தற்போது, சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய இண்டிகோ விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தமிழிசை செளந்தராஜன் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரையில் முருகன் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் மதுரை செல்ல இருந்தார். விமானம் ரத்து செய்யப்பட்டதால் மாற்று விமானம் மூலம் மதுரை செல்வார் என கூறப்படுகிறது.
Read more: போலி பத்திரங்களுக்கு Full Stop.. தமிழக பத்திரப்பதிவுத் துறை அதிரடி..!! பிளாக் செயின் டெக்னாலஜி பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா..?