2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி அதிகமாக இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்..


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 37 – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.. தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. ஈரோட்டில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

சூப்பர் குட் நியூஸ்..!! கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைகிறது..? வெளியான முக்கிய தகவல்..!!

Sat Apr 15 , 2023
நாடு முழுவதும் அதிகரித்து வரக்கூடிய எரிவாயு விலையை குறைக்க அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தற்போது அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், கேஸ் விலையும் குறையும். நாட்டின் புதிய எரிவாயு விலை நிர்ணய முறை ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் லிமிடெட் (ஓஐஎல்) ஆகிய எரிவாயு நிறுவனங்களின் வருமானத்தை குறைக்கும். ஏப்ரல் 6ஆம் தேதி […]
சூப்பர் குட் நியூஸ்..!! கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைகிறது..? வெளியான முக்கிய தகவல்..!!

You May Like