தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்(29) இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே வெகுகாலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவருடைய பெரியப்பா துரைராஜ்(57) என்பவர் பேசி வந்ததால் ஆத்திரம் கொண்ட ராணுவ வீரர் சுரேஷ் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த துரைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அதே ரகத்தில் அசோக்குமார் வீட்டிற்கு வந்த சுரேஷ் உறங்கிக் கொண்டிருந்த அவரையும் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார் இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை கொலை செய்த ராணுவ வீரர் சுரேஷை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த இரட்டை பகுதி சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.