கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கர காட்டுத்தீ தொடர்ந்து பரவி, காற்றின் தரத்தைப் பாதித்தது, இதனால் மனிடோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலத்திலிருந்து சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அடுத்து மனிடோபாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயால் பரவும் புகை சில பகுதிகளில் புகைமூட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகெட்சிவான் (Saskatchewan), அல்பெர்ட்டா (Alberta) மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் வெப்பமான வறண்ட வானிலையால் சில இடங்களில் தீ தொடர்ந்து பரவி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலை மாறாத வரை அடுத்து 4 முதல் 7 நாள் நெருக்கடியாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கனடா மற்றும் எல்லையோரத்தில் உள்ள சில அமெரிக்க மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமடைந்தது, மேலும் காட்டுத்தீ புகை பார்வையையும் பாதித்தது.
தீயை அணைக்க ஓரிகான், அலாஸ்கா மற்றும் அரிசோனா உள்ளிட்ட பிற மாகாணங்கள் மற்றும் அமெரிக்க மாநிலங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், அவசரகால குழுக்கள் மற்றும் விமான ஆதரவு அனுப்பப்பட்டு வருவதாக சஸ்காட்சுவான் முதல்வர் ஸ்காட் மோ தெரிவித்தார்.