ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்; உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..

school teachers

ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது..


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.. அதன்படி ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. எனினும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் ஆசிரியர் பணியை தொடரலாம் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஓய்வு பெறும் வயது இருந்தால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.. இல்லையெனில் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை நிறுவனங்களில் அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கை பரிந்துரை செய்வதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. எனினும் இந்த தேர்வு எழுதாமலே சில ஆசிரியர்கள் பணியியில் சேர்ந்துள்ளனர்.. இவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..

Read More : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்..? சற்று நேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..! தமிழக அரசியலில் பரபர..

RUPA

Next Post

ஆரோக்கியாமானது என நினைத்து, காலையில் இந்த உணவுகளை சாப்பிடுறீங்களா? கவனமா இருங்க! பல பிரச்சனைகள் வரலாம்!

Mon Sep 1 , 2025
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. நாம் சாப்பிடுவது நாள் முழுவதும் நமது ஆற்றலையும் மனநிலையையும் பாதிக்கிறது. இருப்பினும், நாம் தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சுகாதார நிபுணருமான டாக்டர் மனன் வோரா கூறுகிறார். இந்தியாவில் பொதுவாக உண்ணப்படும் ஆரோக்கியமற்ற காலை உணவுகள் குறித்தும், அதற்கான மாற்று வழிகள் குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார்.. பலர் காலையில் […]
unhealthy breakfast

You May Like