தமிழ்நாட்டில் இந்தாண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தண்டு கல்வி விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நேற்று (மே 30) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? அதைத்தாண்டி சாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. மாணவர்களின் ஆசையை பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு அழுத்தமும் கொடுக்கக் கூடாது. விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து நீட் தேர்வு எதிராக குரல் கொடுத்து வந்தார். ஆனால், தற்போது நீட் தேர்வு மட்டும் தான் உலகமா..? என பேசியிருக்கிறார். இதனால், ஒருவேளை 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் முதலமைச்சரானாலும் நீட் தேர்வை ரத்து செய்யமாட்டார் என மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுஒருபக்கம் இருந்தாலும், நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதாவது, இந்த விழாவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து தனியார் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் வந்திருந்தார். அவர் பேசுகையில், விஜய் கைகளால் பரிசு வாங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனைவரிடமும் இதனை என் மகன் சொல்லி வருவதாகவும் கூறினார். என் மகனுடன் சேர்த்து, என்னையும் இந்த விழாவுக்கு அழைத்து வந்த தவெக நிர்வாகிகளுக்கு நன்றி.
கல்வியின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள், காமராசர், ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம் ஆகியோர் தான். அந்த வகையில், இளைய தளபதிக்கு ஒரு பட்டம் கொடுக்க விரும்புகிறேன். கல்வி சேவையை விஜய் தொடர்ந்து செய்ய வேண்டும். கல்விக்கு அவர் இவ்வளவு பெரிய தொண்டு செய்து வருவதால், இளைய தளபதி என்ற பட்டத்துடன் சேர்த்து ’இளைய காமராசர்’ என்றும் அழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தான், சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு விஜய் பரிசளித்த விழாவில் அவர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் “இளைய காமராஜர்” என்ற பெயரையும் குறிப்பிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர்.
Read More : இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!! மாநிலங்களவைக்கு செல்கிறார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்..?