21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. போக்சோ சட்டத்தில் கைது..!! சிக்கியது எப்படி..?

ooty teacher

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், உதகை அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த இவர், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை கற்பித்து வந்தார்.

சமீபத்தில், அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் வந்த போது, ஒரு 12 வயது மாணவி, ஆசிரியர் செந்தில்குமார் தன்னை உடலில் தகாத வகையில் தொடு முயன்றதாக புகார் அளித்தார். இதையடுத்து, அதே பள்ளியில் படிக்கும் மற்றும் 20 மாணவிகளும் அவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இது குறித்து உடனடியாக உதகை ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, 21 மாணவிகளுக்கும், முத்தமிடுதல், தவறான தொடுதல், தனிப்பட்ட உரையாடல்களுடன் மாணவிகளை அவமதித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்னர், செந்தில்குமருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் (Protection of Children from Sexual Offences Act) வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

Read more: லாஸ்ட் வார்னிங் CM சார்.. “இதை செய்யவில்லை என்றால்.. பரந்தூர் மக்களுடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவேன்..!!” – விஜய் ஆவேசம்

Next Post

2,500 காலியிடங்கள்.. மெகா வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்ட பேங்க் ஆஃப் பரோடா !

Fri Jul 4 , 2025
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா (BOB), உள்ளூர் வங்கி அதிகாரிகள் (LBO) ஆட்சேர்ப்புக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2,500 காலியிடங்களை நிரப்புவதே இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும். இதில் தமிழ்நாட்டிலும் மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் […]
BOB LBO 2025 Recruitment 2500 Vacancies Reg. Starts Today

You May Like