தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம்..? வரும் 14ஆம் தேதி அமைச்சராகிறார் உதயநிதி..?

வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 


திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் 14ஆம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒரு முறை தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.

தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம்..? வரும் 14ஆம் தேதி அமைச்சராகிறார் உதயநிதி..?

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது. மேலும், மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

CHELLA

Next Post

இந்தியாவில் முதல்முறை..!! தங்க ஏடிஎம் மையம் அறிமுகம்..!! எப்படி பயன்படுத்துவது..?

Wed Dec 7 , 2022
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க […]
இந்தியாவில் முதல்முறை..!! தங்க ஏடிஎம் மையம் அறிமுகம்..!! எப்படி பயன்படுத்துவது..?

You May Like