பற்றி எரியும் பிரான்ஸ் தேசம்..! நடந்தது என்ன??

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். இதனால் தற்காப்புக்காகவே அவரை சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில், மஞ்சள் நிற காரை நிறுத்தி காரை ஓட்டியவரை துப்பாக்கி முனையில் காவலர்கள் சில கேள்விகள் கேட்பதும் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த போதே கார் கிளம்பத் தயாரானதும் காவல்துறையினர் சுடுவதும் பதிவாகியுள்ளது. ஆனாலும் கார் சில மீட்டர் முன் சென்று ஒரு கம்பத்தில் மோதி நின்றுள்ளது வேறு ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டம் வெடித்தது. தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என நஹேலின் தாயார் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து கடந்த வியாழன் அன்று 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இளைஞர் சுடப்பட்ட விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் கூறுகையில், இளைஞர் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாதது. சிறுவன் மரணத்தை எவ்விதத்திலும் நியாயப்படுதத முடியாது என்றும் தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் பாரீஸில் நடைபெற்ற போராட்டத்தின்போது பயங்கர வன்முறைகள் வெடித்தன. வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் துப்பாக்கிக் கடையை சூறையாடி அங்கிருந்த துப்பாக்கிகளை கொண்டு சென்றனர். தொடர் போராட்டத்தால் மார்சேய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் 80 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப ஆண்டுகளாக பிரான்ஸ் போலீசாரால் சுடப்பட்டவர்கள் பெரும்பாலும் கறுப்பினத்தவர்களாகவும் அரேபியர்களாகவும் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 13 பேர் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றவில்லை என சுடப்பட்டுள்ளனர். தற்போது சுடப்பட்ட இளைஞரும் பிரெஞ்சு – அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயது இளைஞர் நஹெல் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

1newsnationuser1

Next Post

320 ஆண்டுகள் பழைமையான செய்தித்தாள் நிறுத்தம்..!

Sun Jul 2 , 2023
ஊடகத் துறையில் அச்சுப் பதிப்பு மூலம் வெளிவந்த நாளிதழ்கள் நிறுத்தப்பட்டு, அவை டிஜிட்டல் வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த காலங்களில் பல நீண்டகால பத்திரிகைகள் தனது அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 320 ஆண்டுகள் பழைமையான ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாளும் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது. வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாள் வெளியாகி வந்தது. […]
download 5

You May Like