உலகிலேயே மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் தலைநகரம்…

உலகிலேயே நவம்பர் 2022ல் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே இந்த மாதத்தில் எந்தெந்த நகரங்கள் அதிக அளவில் மாசடைந்துள்ளது என்பது பற்றிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.இதில் இந்தியாவின் தலைநகரான டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரமும் மூன்றாவது இடத்தில்டாக்காவும் உள்ளது. கொல்கத்தா 5வது இடத்தையும் மும்பை 8வது இடங்களை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இநதியாவில் 3 நரங்கள் அதிக மாசடைந்ததாக உள்ளது. பாகிஸ்தானில் ஒரே ஒரு நகரம் மட்டும் கராச்சி 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.


நம்மால் காற்று இல்லாமல் 5 நிமிடம் கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கின்றோம். காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் மீதம் 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன.

வளர்ந்து வரும் நாகரீகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும் தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும் காற்று மாசுபடுகின்றது. இதனால் ஆண்டுக்கு 120 லட்சம் பேர் வரை இறக்கின்றார்கள். பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்று நோய் போன்ற நோய்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. காற்று மாசுடுவதால் நுரையீரல்நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது.

Next Post

நளினிதான் முதல் குற்றவாளி… முன்னாள் போலீஸ் அதிகாரி பரபரப்பு புகார்…

Tue Nov 15 , 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சமீபத்தில் விடுதலையான நளினியை குற்றவாளி என்று முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்தான் பெண் காவல் அதிகாரி அனுசுயா. சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஏ1 குற்றவாளி அவருடன் சேர்ந்த 25 பேர் தூக்குத்தண்டனை கைதிகள். பின்னர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
AnasuyaEarnest 190522 650

You May Like