இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மழை…! 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…!

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடல், பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சக மாணவர்கள் நெஞ்சில் குதித்ததில், 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!!

Fri Dec 16 , 2022
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சிவம்(7) என்ற 2-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களுடன் சண்டையிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையின் போது சக மாணவர்கள் நெஞ்சில் குதித்ததில் சிறுவன் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் […]
860 main crime by the numbers 0

You May Like