தாயின் கருவில் உள்ள குழந்தை… உணவின் சுவை உணரும் ஆச்சரியம்; ஆய்வில் தகவல்..!!

வடகிழக்கு இங்கிலாந்தில் இருக்கிறது டர்ஹாம் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் சுவாரசிய முடிவு இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


தாயின் கருவில் உள்ள குழந்தைகள் பல்வேறு உணவின் சுவைகள் மற்றும் வாசனைகளை உணர்ந்து அதனுடைய முக பாவனைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சி. டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 100 கர்ப்பிணிப் பெண்களிடம் 4டி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளை செய்தனர்.

இந்த ஆய்வின் போது 35 கர்ப்பிணி பெண்களுக்கு கேரட் சுவை கொண்ட காப்ஸ்யூல்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை எடுத்துக்கொண்ட 20 நிமிடங்களுக்கு பிறகு கருவில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரிப்பது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரிந்தது. அதே நேரத்தில் மற்ற 35 கர்ப்பிணி பெண்களுக்கு முட்டைக்கோஸ் போன்ற “இலை தாவர உணவு'” சுவை கொண்ட காப்ஸ்யூல்கள் கொடுக்கப்பட்டது.

இதை அந்த கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்களின் குழந்தைகள் அழுகை முகத்துடன் இருப்பது அல்ட்ராசவுண்ட் சோதனையில் தெரியவந்தது. இந்த ஆய்வின் போது உணவின் சுவை தெரிந்து கருவில் குழந்தைகள் வெளிப்படுத்திய முக பாவனைகளின் புகைப்படங்களை டர்ஹாம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

Sat Sep 24 , 2022
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயண செலவை ஏற்க தமிழக அரசு முன் வந்துள்ளது. தாய்லாந்தில் ஐடி வேலை வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி உள்ளது. அப்படி ஏமாறியவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. இந்த சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ளனர். சிக்கிய 300 பேரில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். […]
126806141 a6a325b3 a15e 48c0 8cba 7d5fea2167e3

You May Like