மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த சமையல்காரர்.. தனது துணிச்சலுக்கு வாழ்நாள் முழுவதும் விலை! மறக்கப்பட்ட கதை!

gandhi cook

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் காப்பாற்றியது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை மாற்றியது, ஆனால் அவரது சொந்த குடும்பத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. பல தசாப்தங்கள் கழித்தும், அவரது தியாகம் இன்னும் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறது. மறக்கப்பட்ட இந்த வரலாறு குறித்து பார்க்கலாம்..


அவரது பெயர் படக் மியான், பீகாரைச் சேர்ந்த ஒரு எளிய சமையல்காரர்.. அவர் தான் காந்திக்கும் மரணத்திற்கும் இடையே இருந்தார்.. 1948 இல் நாதுராம் கோட்சேவின் தோட்டாக்கள் காந்தியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவரைக் கொல்ல மற்றொரு சதி இருந்தது.. ஆம்.. ஒரு கிளாஸ் பாலில் விஷம் சேர்த்து கொடுக்கும் சதித்திட்டம் இருந்தது.. அதைத் தடுத்தவர் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு வழக்கறிஞரோ அல்லது ஒரு புரட்சியாளர் அல்ல – அது ஒரு கிராம சமையல்காரர்..

1917 ஆம் ஆண்டு அப்போது டின்காதியா முறை (Tinkathia System) என்பது பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் அமலில் இருந்தது. குறிப்பாக பீகார் போன்ற மாநிலங்களில் விவசாயிகளை நிலத்தின் 20 பாகங்களில் 3 பாகங்களில் கட்டாயமாக இண்டிகோ பயிரிடச் செய்த ஒரு முறையானது. இது ஐரோப்பிய தோட்டக்காரர்களால் விவசாயிகளின் உணவுப் பயிர் சாகுபடியைக் கட்டுப்படுத்தவும், இலாபம் ஈட்டவும் கொண்டுவரப்பட்டது.

இந்த டின்காதியா முறையை விசாரிக்க காந்தி பீகாரின் சம்பாரணுக்குள் நுழைந்தார். இந்த முறையை எதிர்த்து மகாத்மா காந்தி நடத்திய சம்பாரண் சத்தியாகிரகம், இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

எர்வின் என்ற பிரிட்டிஷ் மேலாளரான ஒரு இண்டிகோ தோட்டக்காரர், காந்தியை கொலை செய்ய ஒரு திட்டத்தைத் தீட்டினார். இரவு உணவு அழைப்பின் போது காந்தியின் பாலில் விஷம் கலக்கும்படி அவர் தனது சமையல்காரரான படக் மியனுக்கு அறிவுறுத்தினார். இதற்காக அவருக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்று கூறினார்.. ஆனால் அவர் ஏற்காத நிலையில், மிரட்டல் விடுத்தார்..

ஆனால் படக் மியான் பயத்தை விட தைரியத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் காந்திக்கு விஷம் கலந்த வழங்கினார், ஆனால் “குடிக்காதே, அது விஷம்” என்ற நடுங்க வைக்கும் உண்மையை கிசுகிசுத்தார். இதற்கு சாட்சியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்தார், பின்னர் அவர் இந்தியாவின் முதல் ஜனாதிபதியானார்.

துணிச்சலின் விலை

காந்தி அன்றிரவு கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.., ஆனால் படக் மியனின் வாழ்க்கை சிதைந்தது. வேலையில் இருந்து நீக்கப்பட்டார், சிறையில் அடைக்கப்பட்டார், சித்திரவதை செய்யப்பட்டார், அவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டனர் – பிரிட்டிஷ் பார்வையில் ஒரு துரோகிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அவர் அனுபவித்தார். அவரது வீடு சாம்பலாக்கப்பட்டது, அவரது கண்ணியம் பறிக்கப்பட்டது.

இருப்பினும், பல தசாப்தங்களாக, அவரது கதை புதைந்து கிடந்தது.. 1950 ஆம் ஆண்டு, தற்போதைய இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் சம்பாரனுக்கு வருகை தரும் வரை. மனதைத் தொடும் ஒரு தருணத்தில், கூட்டத்தில் இருந்த பலவீனமான வயதான சமையல்காரரை பிரசாத் அடையாளம் கண்டு, அவரைத் தழுவி, ஆயிரக்கணக்கானோர் முன், “மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்” என்று அறிவித்தார்.

பாடக் மியனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தியாகத்திற்கான வெகுமதியாக நிலத்தை பிரசாத் உறுதியளித்தார். ஆனால் வரலாற்றில் பல வாக்குறுதிகளைப் போலவே, இது நினைவாக எழுதப்பட்டது, செயலில் அல்ல.

தேசத்தால் மறக்கப்பட்ட கதை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், படக் மியனின் சந்ததியினர் வால்மீகி புலிகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இன்னும் உயிர்வாழ்வதற்காகப் போராடுகிறார்கள். அவர்களின் கல்லறைகள் கவனிக்கப்படாமல் கிடக்கின்றன, அவர்களின் வேண்டுகோள்கள் கேட்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஊடகங்கள் அவர்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகு, குடும்பத்தின் நிலை குறித்து அறிக்கை கோரினார். எனினும் அவருக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.. அவரது பேரக்குழந்தைகள் தினசரி கூலிக்கு வேலை செய்ய வைத்தது. தேசப்பிதாவின் உயிரைக் காப்பாற்றிய மனிதர் இன்று அரிதாகவே நினைவுகூரப்படுகிறார், அவரது குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது என்பதே வேதனையான உண்மை…

இன்று இந்தக் கதை ஏன் முக்கியமானது?

ஹேஷ்டேக்குகளுடன் ஹீரோக்களைக் கொண்டாட விரும்பும் இந்தியாவில், படக் மியனின் கதை மறக்கப்பட்ட நிகழ்வாகும்.. வரலாறு மேடைகளில் உள்ள தலைவர்களால் வடிவமைக்கப்படுவதில்லை.. உண்மைக்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கும் சாதாரண மக்களாலும் இது பாதுகாக்கப்படுகிறது என்பதை இது நினைவூட்டுகிறது. இந்த மறந்துபோன சமையல்காரரை இந்தியா அதன் பாடப்புத்தகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் தேசிய நினைவகத்தில் மீண்டும் எழுதும் நேரம் இதுவாக இருக்கலாம். ஏனெனில் அவர் இல்லை எனில், காந்தியின் சத்தியாகிரகம்.. ஏன்? ஒருவேளை நமது சுதந்திரம் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான்..

Read More : காந்திக்கு ‘தேசத்தந்தை’ என்ற பட்டம் அதிகாரப்பூர்வமாக கிடைத்ததா?சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

RUPA

Next Post

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! வட்டியில் மாற்றமா..? பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளுக்கு அடித்த ஜாக்பாட்..!!

Thu Oct 2 , 2025
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு நிதிச் சிக்கலின்றி நல்ல எதிர்காலத்தை அமைக்கவே கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க மத்திய அரசு வழங்கியுள்ள ஒரு அற்புதமான திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு ஒரு நிம்மதியான […]
Selva Magal 2025

You May Like