நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்படும். அந்தவகையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து ஆந்திரா, கோவை, கர்நாடகா, மதுரை போகும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணமானது அதிகரிக்கப்பட உள்ளது. அதோடு சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.