ஆந்திர மாநிலத்தில் பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே அனக்காபள்ளி அடுத்த கொத்த பள்ளம் கிராமத்தில் ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளார்கள். தற்செயலாக அப்பகுதியில் இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் தண்ணீரில் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அந்த உடல் யாரென்று தெரியாத அளவிற்கு முகம் சிதைந்துள்ளது.
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் பாகங்களை கேட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மேலும், இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் செய்யப்பட்ட நபர் யார்? என்றும் மற்றும் கொலை செய்தவர் யார் ? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.