அரசு பள்ளி மாணவர்கள் இனி ஆங்கிலத்தில் சுலபமா பேசி அசத்தலாம்.. புதிய திட்டம் அமல்..!!

school 1

அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கில, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “திறன்கள்” என்ற திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும், சமீபத்தில் வெளியான நாஸ், ஏசிஇஆர் ஆகிய கற்றல் அடைவு ஆய்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மொழித் திறன்களை அடைவதில் குறைபபடும் இருப்பதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழக மாணவர்களிடையே இருக்கும் ஆங்கில மொழி திறன் குறைபாட்டை சரிசெய்ய ”லெவல் அப்” எனப்படும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஆங்கில திறன்களை வளர்க்க, இந்த ‘லெவல் அப்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பள்ளிகளில் ஆங்கில திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன், ஆங்கிலம் பேசுதல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் எளிதில் ஆங்கில மொழியின் அடிப்படை திறன்களை அடையும் வகையில், ஜூன் முதல் டிசம்பர் வரை ஏழு மாதங்களுக்கு, ஆசிரியர்களுக்கு மாத வாரியான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more: இன்று உலக சைக்கிள் தினம்!. தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு எத்தனை நன்மைகள் தெரியுமா?

Next Post

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி!. டாஸ் வெல்வது எவ்வளவு முக்கியம்!.  ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் ரிப்போர்ட் என்ன?

Tue Jun 3 , 2025
18வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து முழங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில், கோப்பை கனவு, கனவாகவே நீடித்து வந்தது. நடப்புத் தொடரில், முதல் இரு […]
ipl 2025 final 11zon

You May Like