நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே மகாநகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நெஞ்சு வலி ஏற்பட்டு, பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு சென்ற மருத்துவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவருடன் வார்டு பாயும் இருந்துள்ளார். பெண் மயக்கம் அடைந்த பின்னர் மருத்துவமனை அறையிலேயே வைத்து இருவரும், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மயக்கம் தெளிந்த நிலையில், தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அந்த பெண், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவர் மற்றும் வார்டு பாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். உடல் நலத்தை காப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை மருத்துவர் இப்படி திட்டம் தீட்டி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.