மனைவியிடம் மாத சம்பளம் பற்றி தெரிவிக்காத கணவன் … மனைவி என்ன செய்தார் தெரியுமா?

மனைவியிடம் மாத சம்பளம் எவ்வளவு என கணவன் தெரிவிக்காததால் சட்டத்தை நாடி தெரிந்துகொண்டுள்ளார்.

சில கணவன்மார்கள் தனது சம்பளம் குறித்த தகவலை மனைவியிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவேளை திருமண உறவு முறியும் தருவாயில் வழக்கறிஞர் மூலம் கேட்டுப் பெறலாம். ஆனால் கணவனுடன் வாழும் நிலையில் அவரது ஊதியம் குறித்த தகவலை கணவன் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கும் வழி உள்ளது. அது தான் ஆர்.டி.ஐ. சட்டம் . சஞ்சு குப்தா என்பவர் தனது கணவரின் வருமானத்தை அறிந்து கொள்ள நினைத்துள்ளார். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. எனவே மத்திய பொது தகவல் தரும் அதிகாரி (வருமான வரித்துறை ) கணவன் சம்மதிக்காததால் முதலில் விவரங்களை வழங்கவில்லை.

முதலில் மேல் முறையீட்டு ஆணையம் என்ற எஃப். ஏ.ஏ. விடம் சஞ்சு குப்தா உதவி கேட்டார். இதையடுத்து மத்திய பொது தகவல் தரும் ஆணையத்தை அணுகினார். அதில் சில தீர்ப்புகளை ஆராய்ந்து தகவல் தருமாறு உத்தரவிட்டது. 15 நாட்களுக்குள் பொது அதிகாரத்தில்இருக்கும் கணவர் நிகர வரிக்குள்பட்ட வருமானம் அல்லது மொத்த வருமான குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய பொதுத் தகவல் அதிகாரிக்கு ஆணையம் உத்தரவிட்டது.

Next Post

பிரபலங்கள் அதிகம் குடிக்கும் கருப்பு தண்ணீர்..!! அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் இதை குடிக்கிறார்கள்?

Mon Oct 3 , 2022
விளையாட்டு வீரர்கள் தொடங்கி, திரையுலக நட்சத்திரங்களும் குடிக்கும் கருப்பு தண்ணீர் தான், தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கருப்பு தண்ணீர் என்றால் என்ன? அதன் பயன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்… நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் இல்லாமல், இந்த உலகில் எதுவுமே இல்லை. தாவரங்கள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை அனைவரும் உயிர் வாழ தேவையான ஓர் அமிர்தம் என்றால், அது தண்ணீர் […]
பிரபலங்கள் அதிகம் குடிக்கும் கருப்பு தண்ணீர்..!! அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் இதை குடிக்கிறார்கள்?

You May Like